தமிழ்நாடு

tamil nadu

CCTV: மூதாட்டியைக் கொன்று 20 சவரன் நகைகள் கொள்ளை - இருவர் கைது!

By

Published : Jun 30, 2022, 5:48 PM IST

புதுச்சேரியில் மது வாங்குவதற்காக மூதாட்டியைக் கொலை செய்து 20 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சிசிடிவி காட்சி
சிசிடிவி காட்சி

புதுச்சேரிஅடுத்த சேதராப்பட்டு பகுதியில் தனியாக வசித்து வருபவர் உண்ணாமலை (75) என்ற மூதாட்டி. இவர் எப்போதும் நகைகளை அனிந்திருப்பார். வழக்கமாக வெளியே வந்து செல்லும் மூதாட்டி கடந்த 23ஆம் தேதி இரவு வீட்டை விட்டு வெளியே வரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் மூதாட்டி வீட்டிற்குச்சென்று பார்த்தபோது சந்தேகத்திற்கு இடமான முறையில் அவர் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக சேதராப்பட்டு காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் கொலைக்கான துப்பு கிடைக்காததால் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டதில் 18 பேரை சந்தேகத்துடன் விசாரித்ததில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

கொலை செய்யப்பட்ட நேரத்தில் அப்பகுதியில் சந்தேகத்தின் அடிப்படையில் சென்ற இருசக்கர வாகனத்தை, சிசிடிவி உதவியுடன் ஆய்வு செய்தபோது மொரட்டாண்டி பகுதியைச் சேர்ந்த கான்ட்ராக்டர் ஸ்டீபன் என்பது தெரியவந்தது.

அவரைப் பிடித்து விசாரித்தத்தில் அவரும் அவரது நண்பரான துணை உதவி ஆய்வாளர் மகனுமான பால பவித்திரன் இருவரும் நகைக்காக மூதாட்டியை கொலை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து இருவரையும் கைது செய்த கோரிமேடு காவல் துறையினர் இவர்களை சேதாரப்பட்டு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். துணை உதவி ஆய்வாளர் மகனும், ஸ்டீபனும் மது அருந்தும்போது நண்பர்களாகி உள்ளனர். மேலும் அடிக்கடி மது அருந்த பணம் இல்லாததால் சிறு சிறு வழிப்பறி செய்த நிலையில், மது அருந்துவதற்காக மூதாட்டியைக் கொலை செய்து 20 சவரன் நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.

சிசிடிவி காட்சி

தொடர்ந்து மொரட்டாண்டி பகுதியில் பதுக்கி வைத்திருந்த நகைகளை மீட்ட காவல் துறையினர் இருவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:மாணவி குளிப்பதை வீடியோ எடுத்த மகன் மற்றும் அதனை ஆதரித்த தந்தை ஆகியோர் போக்சோவில் கைது!

ABOUT THE AUTHOR

...view details