தமிழ்நாடு

tamil nadu

13 வயது சிறுமி உட்பட இரு பெண்களை சீரழித்த காமுகர்கள் கைது!

By

Published : Dec 9, 2022, 4:56 PM IST

செம்மஞ்சேரியில் வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமி உள்பட இரண்டு பெண்களை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டனர்.

Etv Bharat
Etv Bharat

சென்னை:செம்மஞ்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் கணவரை இழந்து தனியாக இரண்டு பெண்கள் வசித்து வருகின்றனர். அதில் ஒருவருடைய மகள் 13 வயது சிறுமி. கடந்த 3ஆம் தேதி மூவரும் வீட்டின் தனியாக இருந்தபோது, மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று வீட்டிற்குள் புகுந்தனர்.

அங்கு, கத்தியைக் காட்டி மிரட்டி, இரண்டு பெண்கள் மற்றும் 13 வயது சிறுமி ஆகியோரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். பின்னர் மூவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் குற்றவாளிகள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சம்பவத்தில் ஈடுபட்ட நெஸ்லி (எ) ரிஷி என்பவரை மட்டும் கைது செய்தனர். மேலும், இருவர் தலைமறைவாக இருந்து வந்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய இருவரும் பாதிக்கப்பட்ட பெண்களைத் தேடிச் சென்றபோது அவர்கள் வீட்டில் இல்லாததால் அவர்களின் உறவினர்களிடம், புகார் கொடுத்ததால் அப்பெண்களைக் கொலை செய்து விடுவதாக மிரட்டு விட்டுச் சென்றனர்.

இது தொடர்பாக செம்மஞ்சேரி ஆய்வாளர் நட்ராஜ் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில் குற்றவாளிகள் இருவரையும் பிடிக்க முயன்ற போது மாடியிலிருந்த சுரேஷ் (24) என்பவர் குதித்துத் தப்பியோட முயன்றார். இதில் அவருக்குக் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும் அசோக் (23) என்பவரையும் விரட்டிப் பிடித்து கைது செய்தனர்.

விசாரணையில் சுரேஷ் மூன்று மாதத்திற்கு முன்பு தான் சிறையிலிருந்து வெளியில் வந்தது தெரியவந்தது. இவர் மீது கொலை, கொள்ளை, கஞ்சா, கற்பழிப்பு என ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. தனியாக இருக்கும் பெண்களை வீடு புகுந்து பாலியல் வன்புணர்வு செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

பலரை மிரட்டுவது, தட்டிக் கேட்பவர்களைக் காயம் ஏற்படுத்தி அச்சுறுத்துவது என ரவுடியாக வலம் வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்து 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து, இருவரையும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:திருடிய பைக்கை நான்கு கி.மீ தள்ளி சென்ற இளைஞர்!

ABOUT THE AUTHOR

...view details