சென்னை திருவொற்றியூர் புதுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இப்பகுதியில் தேநீர் கடை நடத்திவரும் இவர் பக்கத்து வீட்டில் இருக்கும் 15 வயது சிறுமி, 10 வயது சிறுமி, 9 வயது சிறுவன் ஆகியோரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் பயந்து போன சிறுமிகள் இது குறித்து தங்களது பெற்றோர்களிடம் தெரிவிக்கவே விஷயமறிந்த பெற்றோர்கள் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் ரமேஷ் மீது புகார் அளித்தனர்.
விசாரணை மேற்கொண்ட திருவொற்றியூர் மகளிர் காவல் துறையினர் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானதையடுத்து அவரை போக்சோ சட்டத்தில் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.