தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாட்டில் 394 பேருக்கு கரோனா சிகிச்சை

By

Published : Mar 27, 2022, 9:15 PM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் 394 பேர் மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 394 பேருக்கு கரோனா சிகிச்சை
தமிழ்நாட்டில் 394 பேருக்கு கரோனா சிகிச்சை

சென்னை:பொது சுகாதாரத் துறை இயக்குனரகம் மார்ச் 27ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 29 ஆயிரத்து 435 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதனால் தமிழ்நாட்டில் இருந்த 34 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர் என்பது தெரியவந்தது. தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 43 லட்சத்து 7 ஆயிரத்து 435 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதனால் தமிழ்நாட்டில் இருந்த 34 லட்சத்து 52 ஆயிரத்து 681 பேர் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 394 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 58 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 14 ஆயிரத்து 262 உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு ஒருவர் கூட இறக்கவில்லை.

இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 25 என தொடர்ந்து நீடித்து வருகிறது. மேலும் சென்னையில் 19 நபர்களுக்கும் செங்கல்பட்டில் 5 நபர்களுக்கும் கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நீலகிரி, சேலம், தஞ்சாவூர், தேனி, திருப்பூர் திருச்சி, வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை.

இதையும் படிங்க:ஈரோடு பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

ABOUT THE AUTHOR

...view details