தமிழ்நாடு

tamil nadu

ஆளுநருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

By

Published : May 5, 2020, 10:44 AM IST

Updated : May 5, 2020, 12:55 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேற்று சந்தித்து உரையாடினார்.

ஆளுநருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
ஆளுநருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

சென்னையில் நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சந்தித்து பேசினார்.

கரோனா தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு தளர்வுகள் உள்ளிட்டவை பற்றி ஆளுநருடன் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆளுநருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழ்நாடு தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், காவல்துறை இயக்குனர் உள்பட அரசு உயர் அலுவலர்கள் பலர்உடனிருந்தனர்.

Last Updated :May 5, 2020, 12:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details