தமிழ்நாடு

tamil nadu

எண்ணூரில் அமோனியம் வாயு கசிவு: கோரமண்டல் தொழிற்சாலையை மூட தமிழக அரசு உத்தரவு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 27, 2023, 1:46 PM IST

Ammonia gas leak in Ennore: எண்ணூரில் அமோனியம் வாயு கசிவு காரணமாக கோரமண்டல் நிறுவனத்தை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

tamil nadu government ordered closure of coromandel company over ammonium gas leak in ennore
எண்ணூரில் அமோனியம் வாயு கசிவு கோரமண்டல் தொழிற்சாலையை மூட தமிழக அரசு உத்தரவு

சென்னை:எண்ணூர் அருகே பெரியக்குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலை ஒன்றில் நேற்று (டிச.26) நள்ளிரவில் திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இந்த வாயு கசிவு காரணமாக, பெரியக்குப்பம் உள்ளிட்ட அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பலருக்கும் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் காற்றில் அமோனியம் வாயுவின் தாக்கம் அதிகளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆலை வாசலில் காற்றில் 400 microgram/m3 இருக்க வேண்டிய அமோனியா 2090 microgram/m3 ஆகவும், கடலில் 5 mg/L இருக்க வேண்டிய அமோனியா 49 mg/L ஆகவும் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழ் நாடு கடல்சார் வாரியத்தின் ஒப்புதலோடு மட்டுமே குழாயை இனி இயக்க வேண்டும் என மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே, காற்றில் வேகமாக பரவும் அமோனியம் வாயுவின் தாக்கத்தை எதிர்கொள்ள முடியாத அப்பகுதி பொதுமக்கள் கொத்துக் கொத்தாக அப்பகுதியை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில், 30-க்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னை ஸ்டான்லி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர்.

எண்ணூர் கோரமண்டல் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு சம்பவம் தொடர்பாக தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. சென்னை எண்ணூர் அருகே பெரியகுப்பம் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இருந்து நள்ளிரவு 11.30 மணியளவில் திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டது. வாயுக்கசிவால் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பகுதியில் வசித்து வந்த பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன.

இதையடுத்து வாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாயுக்கசிவால் பெரியகுப்பம் மீனவ கிராம பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அப்பகுதியை விட்டு ஆட்டோ, இரு சக்கர வாகனங்களில் வெளியேறினர். இதற்கிடையில், வாயு கசிவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஆலை நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆலையை தற்காலிகமாக மூட தமிழக அரசும் உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அமர்வு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார். இந்த வழக்கை ஜனவரி 2ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிடும்படி, தீர்ப்பாய பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஆலையை மூட உத்தரவு: இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சம்பந்தப்பட்ட கோரமண்டல் இண்டர்நேஷனல் லிமிடெட் ஆலையை தற்காலிகமாக மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, எண்ணூர் அமோனியா கசிவு பாதிப்பினால் ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் ஆறு பேரையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து பேசினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆறு பேரும் நன்றாக உள்ளதாக மருத்துவ கல்லூரி முதல்வர் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:எண்ணூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அன்புமணி ராமதாஸ் மருத்துவ பரிசோதனை!

ABOUT THE AUTHOR

...view details