தமிழ்நாடு

tamil nadu

காதல் தோல்வியில் நர்சிங் மாணவி தற்கொலை!

By

Published : Feb 21, 2023, 5:16 PM IST

சென்னை தாம்பரம் அருகே காதல் தோல்வி காரணமாக நர்சிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை விவகாரம் தொடர்பாக சிட்லபாக்கம் போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

காதல் தோல்வியில் நர்சிங் மாணவி தற்கொலை!
காதல் தோல்வியில் நர்சிங் மாணவி தற்கொலை!

சென்னை:தாம்பரம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், அதே பகுதியில் கடந்த 10 வருடங்களாக இரண்டு மகன், ஒரு மகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இரண்டு மகன்களும் தாம்பரம் பகுதியில் வேலை செய்து வருகிறார்கள். 16 வயது மகள் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் படித்து வருகிறார்.

இந்தநிலையில் அவர் தன்னுடன் படிக்கும் சக மாணவருடன் காதல் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது காதலன் மற்றொரு பெண்ணையும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அந்த பெண் காதலனிடம் கேட்டு இருக்கிறார்.

இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு காதல் முறிவு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர், கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்துவந்த கல்லூரி மாணவி அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

அப்போது அவரின் உறவினர் ஒருவர் வீட்டுக்கு வந்து வெகு நேரமாக கதவை தட்டியுள்ளார். ஆனால் வெகு நேரமாக வீட்டு கதவு திறக்காததையடுத்து தாய் சாந்திக்கு தொலைபேசியில் தகவல் கொடுத்துள்ளார். உடனே வீட்டுக்கு வந்த சாந்தி கதவை திறந்து பார்த்தபோது, தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

காதல் தோல்வியில் நர்சிங் மாணவி தற்கொலை!

இதுகுறித்து தகவறிந்த சிட்லபாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகிறார்கள். அதன் அடிப்படையில் முதல் கட்ட விசாரணையில் காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:ஒடுகத்தூரில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள சந்தன மரக்கட்டைகள் பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details