தமிழ்நாடு

tamil nadu

சென்னையில் தொடரும் வருமான வரித்துறை சோதனை; 2 பேர் காசோலையுடன் வந்ததால் பரபரப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 21, 2023, 7:17 PM IST

Chennai IT raid: சென்னையில் பண்டாரி ஸ்டீல் குழுமத்தில் நிறுவனர் ஜெகதீசனுக்கு சொந்தமான வீட்டில் நடந்த சோதனையின்போது இரண்டு நபர்கள் 1.60 லட்சத்திற்கான காசோலையுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Etv Bharat
Etv Bharat

சென்னை:தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பொருட்களை சப்ளை செய்யக் கூடிய ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் நிறுவனத்தின் முகவர்கள், அதன் கிளை நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள், இடைத்தரகர்கள் உள்ளிட்டோர் வருமானத்தை குறைத்துக் காட்டி வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில், சென்னை உள்பட சில மாவட்டங்களில் 40 இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

அந்த வகையில், பாரிமுனை பகுதியில் உள்ள நல்ல முத்து மூக்கர் தெருவில் இயங்கி வருகிறது, பண்டாரி ஸ்டீல் எனும் நிறுவனம். இந்த நிறுவனத்திற்கு பல்வேறு கிளை நிறுவனங்களும் உள்ளது. அந்த இடங்களில் எல்லாம் வருமானவரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் பண்டாரி ஸ்டீல் குழுமத்தில் நிறுவனர் ஜெகதீசன் என்பவருக்கு தியாகராய நகரில் உள்ள இல்லத்திலும், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன், இரண்டாவது நாளாக பத்து பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தபோது, இரண்டு நபர்கள் அந்த வீட்டிற்கு காசோலையுடன் வந்ததாகவும், அப்போது வருமான வரித்துறை அதிகாரிகள் அந்த இரண்டு நபர்களிடமும் விசாரணை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அந்த காசோலையை யார், யாருக்காக அனுப்பியது என்பது குறித்து விசாரணை மேற்கொண்ட பிறகு, அவர்களிடம் காசோலையைப் பெற்றுக் கொண்டு அவர்கள் இருவரையும் வருமான வரித்துறை அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அந்த காசோலை, ஜெகதீசனுக்கு சொந்தமான தனியார் நிறுவனத்தின் மின் கட்டணம் கட்டுவதற்கான, 1.60 லட்சத்திற்கான காசோலை என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: ஜனவரியில் எல்1 புள்ளியில் நிலையாகும் ஆதித்யா எல் 1.. இஸ்ரோ வெளியிட்ட அப்டேட்!

ABOUT THE AUTHOR

...view details