சென்னை:இந்தியாவின் 77வது சுதந்திர தினம் இன்று (ஆகஸ்ட் 15) கொண்டாடப்பட்டது. இதையொட்டி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் சுதந்திர தினத்தை மக்கள் கொண்டாடினர். தமிழகம், ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், குஜராத், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் தலைநகரிலும், அம்மாநிலத்தின் முதல்வர்கள் கொடியை ஏற்றினார்கள்.
இதைத் தொடர்ந்து, சுதந்திர தினத்தையொட்டி புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றி இருந்தார். இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தேசியக் கொடியேற்றி சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
அதைத் தொடர்ந்து, சிதம்பரம் நடராஜர் கோயிலில் கூட கோபுரத்தின் மேல் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. மேலும், இந்திய நாட்டின் 77வது சுதந்திர தினத்தைப் பலரும் கொண்டாடி வரும் நிலையில், சென்னையைச் சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் வீரர் அரவிந்த் தன் குழுவுடன் சென்னை மற்றும் ராமேஸ்வரத்தில் 30 அடி கடல் ஆழத்தில் தேசியக் கொடி ஏற்றினார். பின்பு, நெகிழி இல்லா கடலை உருவாக்கக் கடலிலிருந்து 50 கிலோ நெகிழிகளை அப்புறுப்படுத்திள்ளார்.
இது குறித்து ஆழ்கடல் நீச்சல் வீரர் அரவிந்தன் இடம் கேட்டபோது, "புதுச்சேரி மற்றும் சென்னையில் டெம்பிள் அட்வேண்சர்ஸ் என்ற பெயரில் ஆழ்கடல் பயிற்சி நான் நடத்தி வருகிறேன், இங்கு இந்தியர்கள் மட்டும் இன்றி வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும், தன்னார்வலர்களுக்கும் இங்குப் பயிற்சி பெற்று வருகின்றனர்.