கரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு நவம்பர், டிசம்பர் மாத பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் இந்தாண்டு பிப்ரவரி, மார்ச் மாதத்தில் ஆன்லைன் மூலம் நடைபெற்றது. இந்த தேர்வினை 4 லட்சம் மாணவர்கள் எழுதினர். அவர்களில் 2 லட்சம் மாணவர்களுக்கு மட்டுமே தேர்வு முடிவுகள் வெளியானது. பல்வேறு குளறுபடிகள் காரணமாக ஏராளமான மாணவர்களுக்கு முடிவுகள் வெளியிடப்படவில்லை எனப் புகார் எழுந்தது.
இந்நிலையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 'பொறியியல் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் நடைபெற்ற தேர்வுகளில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக மாணவர்களிடமிருந்து புகார்கள் பெறப்பட்டன. மாணவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் மற்ற பல்கலைக்கழகங்களில் நடைபெறுவது போல மூன்று மணி நேரத்திற்கு ஆன்லைன் வழியில் பொறியியல் மாணவர்களுக்கும் குழப்பங்களின்றி மீண்டும் தேர்வு நடத்தப்படும்.