தமிழ்நாடு

tamil nadu

தமிழகத்தில் நவ.9ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் கூறுவதென்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 7, 2023, 4:32 PM IST

Tamil Nadu weather Update: வடகிழக்கு பருவமழையத் தொடர்ந்து, தமிழகத்தில் 9 மாவட்டங்களிலும், காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் வருகின்ற நவ.9ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நவ.9-ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
நவ.9-ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை:தமிழகத்தில் பல்வேறு மாவடங்களில் நவம்பர்-9-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளாதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையத் தொடர்ந்து பரவலாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இதில் ஒரு சில மாவட்டங்களில் கனமழையும், ஒரு சில மாவட்டங்களில் லேசனா முதல் மிதமான மழை பதிவாகி உள்ளது. சென்னையில் அவ்வேப்போது, ஓரிரு பகுதிகளில் மட்டும் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தற்போது தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, நீலகிரி மற்றும் தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ஈரோடு ஆகிய 14 மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

பின்வரும் இரண்டு நாட்களின் நிலவரம் (நவ-8,9): . நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், நவ.,10 ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரையிலும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது.

அடுத்த 48 மணி நேரத்திற்கான நிலவரம்:சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: அடுத்த 3 தினங்களுக்கு மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதனால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்" என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:தென்காசியை மிரட்டும் கனமழை.. ரயில்வே சுற்றுச்சுவர் இடிந்து சேதம்!

ABOUT THE AUTHOR

...view details