சென்னை: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் 2022 - 23 முதல் 2026 - 27 வரையிலான நிதியாண்டுகளுக்கு மின் கட்டணம், மின் செலுத்துதல் கட்டணம் மற்றும் மாநில மின்சுமை பகுப்பு கட்டணம் ஆகியவற்றை நிர்ணயிப்பது குறித்த கருத்துக்கேட்பு கூட்டம் கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் ஒழுங்குமுறை ஆணைய தலைவர் சந்திரசேகர், செயலாளர் வீரமணி ஆகியோர் தலைமை வகித்தனர்.