சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த குள்ள விஸ்வா என்கிற விஸ்வநாதன் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்திற்கு கையெழுத்திட சென்றபோது, உதவி ஆய்வாளரான தயாளன், காவல் ஆய்வாளரைப் பார்த்து குள்ள விஸ்வாவிடம் கையெழுத்து வாங்கவா, இல்லை சுட்டு விடவா எனக் கேட்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.
இதன் பின்னர், உதவி ஆய்வாளர் முரளி தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்ட நிலையில், திருத்தணியிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட விஸ்வா, அன்று மாலை திருப்பந்தியூர் மாந்தோப்பில் வைத்து என்கவுண்டர் செய்யப்பட்டார். இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.