தமிழ்நாடு

tamil nadu

விமானப்படையில் வேலை எனக்கூறி ரூ.70 லட்சம் மோசடி செய்த நபர் கைது!

By

Published : Jan 5, 2023, 9:08 AM IST

விமானப்படையில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.70 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்ட நபரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வேலைவாய்ப்பு மோசடி
வேலைவாய்ப்பு மோசடி

சென்னை:வேலூர் மாவட்டம் மங்காபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வேலு (52) - நிர்மலா தேவி (40) தம்பதி. இவர்களுக்குக் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தனசேகரன் (35) என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. தம்பதியர் தனசேகரனிடம் இந்திய விமானப்படையில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி பணம் கேட்டுள்ளனர்.

இதனை நம்பிய தனசேகரன், தம்பதினர் இடம் லட்சக் கணக்கில் பணத்தைத் தந்துள்ளார். ஆனால் பணம் பெற்றுக் கொண்ட தம்பதி, வேலை வாங்கித் தராமல் இழுக்கடித்துள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த தனசேகரன் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரைக் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் புகாரை ஆவடி மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு ஆய்வாளர் கீதா தலைமையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த வேலுவை தனிப்படை அமைத்துத் தேடினர்.

கைது செய்யப்பட்ட வேலு

இந்நிலையில் தலைமறைவாக இருந்த வேலுவை போலீஸார் வேலூரில் வைத்து கைது செய்து ஆவடி ஆணையரகம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில், தனசேகர் உட்படப் பலரிடம் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி 70 லட்சம் வரை ஏமாற்றியது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து வேலு மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவரை நீதிமன்றம் முன் நிறுத்தி, சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரது மனைவி நிர்மலா தேவியை போலீசார் தேடி வருகின்றனர். இளைஞர்களின் கனவை சாதகமாகப் பயன்படுத்தி ஆசை வார்த்தை கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபரை கைது செய்து சிறையில் அடைத்த மத்திய குற்றப்பிரிவு போலீசாரை ஆவடி காவல் ஆணையர் வெகுவாக பாராட்டியுள்ளார்.

இதையும் படிங்க: Untouchability issue: புதுக்கோட்டை கோயில்களில் அரசு அதிகாரிகள் ஆய்வு!

ABOUT THE AUTHOR

...view details