நாடு முழுவதும் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை, இந்த வைரஸால் எட்டாயிரத்து 718 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் சென்னை மாவட்டம் கரோனா வைரஸ் தொற்றின் மையப்புள்ளியாகத் திகழ்கிறது.
பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வரும் காவல் துறையினர், இந்த வைரஸிற்கு அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், ராஜ்பவன் வளாகத்தில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றும், தீயணைப்பு மீட்புத்துறை ஊழியருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.