தமிழ்நாடு

tamil nadu

சென்னையில் ரூ.50 கோடி போதைப்பொருள் பறிமுதல்; 79 வயது முதியவர் கைது!

By

Published : Mar 9, 2023, 12:39 PM IST

Updated : Mar 9, 2023, 1:25 PM IST

எத்தியோப்பியா நாட்டுத் தலைநகர் அடிஸ் அபாபாவிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி கொண்டுவரப்பட்ட சுமார் ரூ.50 கோடி மதிப்புடைய 8.96 கிலோ ஹெராயின் போதைப்பொருளைச் சென்னை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். போதைப்பொருள் கடத்தி வந்த மும்பையைச் சேர்ந்த 79 வயது நபரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

சென்னை:எத்தியோப்பியா நாட்டு தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு, கடந்த செவ்வாய்க்கிழமை காலை வந்தது. அந்த விமானத்தில் பெருமளவு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக, சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய் துறையின் தனிப்படை பிரிவினர், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்குச் சாதாரண பயணிகள் போல் வந்து, தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானத்திலிருந்து, மும்பையைச் சேர்ந்த 79 வயது முதியவர் ஒருவர், சுற்றுலாப் பயணிகள் விசாவில் ஆப்பிரிக்கா நாடுகளுக்குச் சென்று விட்டு, இந்த விமானத்தில் எத்தியோப்பியா வழியாக சென்னை வந்தார். அவர் மீது மத்திய வருவாய் புலனாய் துறையினருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர்.

அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்ததால் அவரது உடமைகளை சோதனை செய்தனர். சூட்கேசுக்குள் மறைத்து வைத்திருந்த, 2 பார்சல்களில், 8.96 கிலோ ஹெராயின் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அந்த ஹெராயின் போதைப்பொருள் பார்சல்களை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கைப்பற்றினர். ஹெராயின் போதைப்பொருள், ஒரு கிலோ ரூபாய் 8 கோடி என சொல்லப்படுகிறது. மொத்தமாக 8 கிலோ 96 கிராம் ஹெராயின் போதைப்பொருள் மொத்த மதிப்பு சுமார் 50 கோடி இருக்கலாம் என்கின்றனர் அதிகாரிகள். இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், அந்த 79 வயது முதியவரைக் கைது செய்தனர். அவர் கொண்டு வந்த ஹெராயின் போதைப்பொருளையும் பறிமுதல் செய்தனர்.

அதன் பின்பு கடத்தல் ஆசாமி 79 வயது முதியவரை, சென்னை தியாகராய நகரில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அலுவலகத்திற்குக் கொண்டு சென்று, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த முதியவர் சர்வதேச போதைப் பொருள் கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. சர்வதேச போதைக் கும்பல், வழக்கமாகப் பெண்கள், இளைஞர்கள் போன்றவர்களை, இதைப் போன்ற பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தி வந்தனர். ஆனால் அவர்கள் அடிக்கடி பிடிபட்டு விடுகின்றனர். எனவே சர்வதேச போதை கடத்தும் கும்பல், இதைப் போன்ற முதியவர்களைப் பயன்படுத்தி புதிய யுக்தியைக் கையாண்டுள்ளனர்.

இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் 6.8 கிலோ தங்கம் பறிமுதல்!

Last Updated : Mar 9, 2023, 1:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details