தமிழ்நாடு

tamil nadu

போலி சாதி சான்றிதழ் மூலம் படித்த வழக்கறிஞர் - வெளிச்சத்திற்கு கொண்டு வந்த தாய்!

By

Published : Oct 16, 2022, 10:56 PM IST

போலி சாதி சான்றிதழ் மூலம் ஆந்திராவில் சட்டக்கல்லூரியில் படிப்பை முடித்த நபருக்குச் சிக்கல் ஏற்பட்டதால் தனது தாயை மாற்றுச் சாதி எனக் கூற வேண்டும் என்று கொடுமைப்படுத்துவதாகக் காவல் நிலையத்தில் தாயார் புகார் அளித்துள்ளார்.

போலி சாதி சான்றிதழ் மூலம் படித்த வழக்கறிஞர்
போலி சாதி சான்றிதழ் மூலம் படித்த வழக்கறிஞர்

சென்னை:அடையார் ஆஸ்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜனமா(63) இவரின் கணவர் இவரை விட்டுப் பிரிந்து சென்றதால் வீட்டு வேலை செய்து தனியாக வசித்து வருகிறார். இவருடைய மகன் ரமேஷ் பெருங்குடி பகுதியில் இரண்டு பெண்களுடன் திருமணம் ஆகி வசித்து வருகிறார். இதனால் ரமேஷ் அவரது தாய் ஜனமாவை பார்த்துக் கொள்ளாமல் தனியாக விட்டுச் சென்று விட்டுள்ளார்.

இதனால் தனியாக வசித்து வந்த ஜனமா முதியோர் உதவித் தொகை வேண்டி பலமுறை விண்ணப்பம் கொடுத்தும் அவருக்கு மகன் உள்ளதால் உதவித் தொகை தர முடியாது எனச் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ஜனமாவை அவரது மகன் ரமேஷ் பல்வேறு கொடுமைகளைச் செய்வதாக மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளார். ஆனால் இதுவரை தன்னை யாரும் விசாரணைக்கு அழைக்கவில்லை எனவும் தனது மகன் ரமேஷ் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஜனமா குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அடையாறு துணை ஆணையர் காவல் நிலையத்தில் மீண்டும் ரமேஷ் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஜனமா புகார் அளித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து ரமேஷ் போலியாக ஆதி திராவிடர் எனச் சாதி சான்றிதழ் பெற்று ஆந்திராவில் சட்டக்கல்லூரி படிப்பை முறைகேடாக முடித்து தற்போது வழக்கறிஞராக உள்ளார். இதனால் போலியாக ஆதிதிராவிடர் சாதி சான்றிதழ் பெற்றது குறித்து தேசிய பட்டியல் ஆணையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனால் ரமேஷ் இந்த வழக்கிலிருந்து தப்பித்துக் கொள்ள நான் கலப்பு திருமணத்தில் பிறந்தவன் எனப் பொய் சொல்லச் சொல்லி வற்புறுத்தி என்னை மிரட்டி வருகிறார். அப்படிச் சொல்லாவிட்டால் பொய் வழக்கில் என்னைச் சிறையில் அடைத்து விடுவதாகவும் மிரட்டுகிறார்.

மேலும் இதற்கு நான் மறுப்பு தெரிவித்ததால் நான் வசிக்கும் இடத்தில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் நான் ஒரு பைத்தியக்காரி எனவும் தன்னை தாய் என்று பாராமல் அருவருக்கத்தக்க வார்த்தைகளால் திட்டி மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருகிறார்.

மேலும் என் மகன் ரமேஷ் தனது பெயரை ரமேஷ் மணிகண்டன் என மாற்றிக் கொண்டு பல்வேறு நபர்களிடமும், உறவினர்களிடமும் மோசடி செய்து வருவதாகவும் அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும் அவர் வழக்கறிஞராக உள்ளதால் அவர் மீது காவல் நிலையத்தில் தக்க நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

எனவே தாய் என்றும் பாராமல் தன்னை கொடுமைப்படுத்தும் ரமேஷ் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தாயார் ஜனமா கண்ணீர் மல்க வேண்டுகோள் வித்துள்ளார்.

இதையும் படிங்க:ஆள்மாறாட்டம் செய்து நில மோசடி - பாஜக ஆதரவாளர் ஃபாத்திமா அலி கைது!

ABOUT THE AUTHOR

...view details