சென்னை: மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள பல்வேறுவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பருவமழைக்கு முன்னதாக முடிக்க உத்தரவிட்டிருந்தார்.
தொடர்ந்து, பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கண்காணிக்க மண்டல அளவில் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று (அக். 1) அரசு கூடுதல் தலைமைச் செயலரும், வருவாய் நிர்வாக ஆணையாளருமான பணீந்திர ரெட்டி கண்காணிப்பு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் அவர் பேசுகையில், "மழைநீர் தேங்க வாய்ப்புள்ள தாழ்வான பகுதிகளைக் கண்டறிந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். திறந்த நிலையில் உள்ள மழைநீர் வடிகால்களைச் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களின் கவனத்திற்குக் கொண்டுசென்று உடனடியாக மூட வேண்டும்.