தமிழ்நாடு

tamil nadu

கட்டபொம்மனைப் போல் நெஞ்சுரம் கொள்வோம் - ஸ்டாலின் சூளுரை

By

Published : Oct 16, 2020, 3:05 PM IST

அடக்குமுறைக்கு அஞ்சாத வீரமும், ஆதிக்கத்துக்கு அடிபணியாத தீரமும் கொண்டவர் கட்டபொம்மன் என அவரது நினைவு நாளையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

MK Stalin pays homage to Veerapandiya Kattabomman on his  Memorial Day
MK Stalin pays homage to Veerapandiya Kattabomman on his Memorial Day

சென்னை: ஆங்கிலேயே அரசு விதித்த வரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மக்கள் விடுதலைக்காக உயிர் நீத்தவருமான வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இந்நாளில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரவித்து வருகின்றனர். அந்த வகையில், திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், “வீரம்விளைந்த நெல்லைச் சீமையில் பிறந்து நாட்டின் விடுதலைக்காய் தன் உடல் பொருள் உயிர் என அனைத்தையும் தந்த வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவுநாள் இன்று!

கட்டபொம்மனுக்கு மரியாதை செலுத்திய திமுகவினர்

அடக்குமுறைக்கு அஞ்சாத வீரமும், ஆதிக்கத்துக்கு அடிபணியாத தீரமும், கொண்ட கொள்கைக்காக எத்தகைய தியாகமும் கட்டபொம்மனின் வாழ்க்கைப் பாடங்கள்! அவர் நினைவுநாளில் அவரைப் போன்ற நெஞ்சுரம்கொள்வோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details