தமிழ்நாடு

tamil nadu

Madras IIT: 3 மாதத்தில் 4 மாணவர்கள் தற்கொலை.. சென்னை ஐஐடியில் தொடரும் அவலம்!

By

Published : Apr 21, 2023, 4:51 PM IST

Updated : Apr 21, 2023, 7:55 PM IST

சென்னை கிண்டி ஐஐடி வளாகத்தில் மகாராஷ்டிராவை சேர்ந்த மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி மெட்ராஸ்(Madras IIT) கல்லூரி வளாகத்தில் உள்ள காவேரி விடுதியில் தங்கி மகாராஷ்டிராவை சேர்ந்த கேதார் சுரேஷ் என்ற மாணவர் பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அவர் இன்று திடீரென தற்கொலை செய்துக்கொண்டதாக கோட்டூர்புரம் காவல் நிலையத்திற்கு கல்லூரி நிர்வாகம் தகவல் தெரிவித்தது.

பின்னர் சம்பவ இடத்திற்குச் சென்ற கோட்டூர்புரம் காவல் நிலைய போலீசார் கேதார் சுரேஷ் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்மையில் ஆந்திராவை சேர்ந்த புஷ்பக் சாய்(21) தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் தற்போது, மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த ஒரு மாணவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Video: கல்லூரி வளாகத்தில் பெண் தூய்மை பணியாளர் மீது மோதிய கார்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!

Last Updated :Apr 21, 2023, 7:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details