சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி மெட்ராஸ்(Madras IIT) கல்லூரி வளாகத்தில் உள்ள காவேரி விடுதியில் தங்கி மகாராஷ்டிராவை சேர்ந்த கேதார் சுரேஷ் என்ற மாணவர் பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அவர் இன்று திடீரென தற்கொலை செய்துக்கொண்டதாக கோட்டூர்புரம் காவல் நிலையத்திற்கு கல்லூரி நிர்வாகம் தகவல் தெரிவித்தது.
பின்னர் சம்பவ இடத்திற்குச் சென்ற கோட்டூர்புரம் காவல் நிலைய போலீசார் கேதார் சுரேஷ் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.