தகவல் அறியும் உரிமைச் சட்டம் கடந்த 2005ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் அமல்படுத்தப்பட்டது. ஆதர்ஷ் ஊழல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஊழல்களும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தான் கண்டறியப்பட்டது.
இச்சட்டம் அமல்படுத்தப்பட்டு முதல் 10 ஆண்டுகளில் மட்டும் சுமார் 1.75 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் அனுப்பப்படும் மனுக்களுக்கு பதிலளிக்க காலதாமதம் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.