தமிழ்நாடு

tamil nadu

சென்னையில் 2 நாட்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 9, 2023, 1:51 PM IST

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது

வானிலை மையம் தகவல்
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை:தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 48 மணி நேரத்தில், சென்னை மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தமிழகத்தில் இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

தமிழகப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 48 மணி நேரத்தில், சென்னை மற்றும் தமிழகத்தில் உள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி என 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் சென்னை மற்றும் புறநகரில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மழைப்பதிவு:கோவை, திண்டுக்கல், திருவண்ணாமலை, சேலம் திருப்பூர், ஈரோடு திண்டுகல், நீலகிரி, புதுக்கோட்டை,பெரம்பலூர், தேனீ, ஆகிய மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் மட்டும், 6செ.மீ முதல் 1.செ.மீ வரை மழையானது பெய்து உள்ளது குறிப்பாக கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் தான் அதிகபட்சமாக 6.செ.மீ மழையானது பதிவாகி உள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:இன்று தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்" என்று குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க:"இங்கே இருக்கக்கூடிய எந்த குளத்திலும் தாமரை மலராது" - கனிமொழி எம்.பி பேச்சு!

ABOUT THE AUTHOR

...view details