சென்னை:மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கி வருகிறது. இதில் சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருது வழங்கி வருகிறது. இந்த நிலையில் 69 ஆவது தேசிய திரைப்பட விருது இன்று (ஆக.24) மாலை அறிவிக்கப்பட்டது.
இந்த முறை 2021 ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன. 2021 ஆம் ஆண்டு தணிக்கை சான்றிதழ் பெற்ற படங்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இதில் தமிழ் சினிமாவை பொறுத்தவரை மிகவும் கடுமையாக போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அறிவிப்பு வந்தவுடன் மிகவும் ஏமாற்றத்தை கொடுத்தது. மணிகண்டன் இயக்கத்தில் வெளியான ‘கடைசி விவசாயி’ திரைப்படம் சிறந்த பிராந்திய மொழி என்ற பிரிவில் தேசிய விருது வென்றது.
இப்படத்தில் சிறப்பாக நடித்த மறைந்த நல்லாண்டி தாத்தாவுக்கு சிறப்பு ஜூரி விருது அறிவிக்கப்பட்டது. அதேபோல், ‘இரவின் நிழல்’ படத்தில் இடம்பெற்ற ‘மாயவா தூயவா’ என்ற பாடலை பாடிய ஸ்ரேயா கோஷலுக்கு சிறந்த பின்னணி பாடகி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கோலிவுட் திரையுலகில் இந்த வார ரிலீஸ் பற்றி சிறப்பு பார்வை!!