தமிழ்நாடு

tamil nadu

எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

By

Published : Oct 5, 2021, 3:52 PM IST

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை
மழை

அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தென் மேற்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

இதேபோல் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

அக்டோபர் 5: நீலகிரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர் மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையின் வானிலை நிலவரம்

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் பெரும்பாலான பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழையும் அவ்வப்போது கனமழையும் பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழ்நாடு கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்.

வடகிழக்கு பருவமழை

தமிழ்நாட்டில் அடுத்த 10 நாட்களுக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்க சாத்திய கூறுகள் உள்ளது. அக்டோபர் மாதம் மட்டும் 18 செ.மீ மழைப் பதிவாகும். தற்போது வரை 5 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details