தமிழ்நாடு

tamil nadu

உக்ரைனில் இருந்து நாடுதிரும்பிய மாணவர்களுக்கு மருத்துவக்கல்வி கிடைக்குமா? : அமைச்சர் மா.சு விளக்கம்

By

Published : Mar 8, 2022, 6:31 PM IST

உக்ரைனில் இருந்து மீட்கப்பட்டு தமிழ்நாட்டிற்கு வந்த மருத்துவ மாணவர்களை மருத்துவக்கல்லூரியில் சேர்ப்பது குறித்து ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் அனுமதிக்கப்படுவார்கள் எனவும், வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கும் மாணவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணிகள் விரைவில் முடிக்கப்படும் எனவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் இருந்து நாடுதிரும்பிய  மாணவர்களுக்கு மருத்துவக்கல்வி கிடைக்குமா? : மா.சு விளக்கம்
உக்ரைனில் இருந்து நாடுதிரும்பிய மாணவர்களுக்கு மருத்துவக்கல்வி கிடைக்குமா? : மா.சு விளக்கம்

சென்னை:மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் சார்பில் உலக மகளிர் தின விழா, சென்னை - தேனாம்பேட்டையில் உள்ள தேசிய நல்வாழ்வுக்குழுமத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு, மகளிர் தினத்தையொட்டி நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்ற மருத்துவப்பணியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மேலும் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவ காப்பகத்தில் இருந்து முதல்முறையாக பாராஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் அதற்கான கோப்பையைக்காண்பித்து அமைச்சரிடம் வாழ்த்துகளைப் பெற்றனர்.

தடுப்பூசி செலுத்துவதில் மக்களின் அலட்சியப்போக்கு

இந்நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'கரோனா பெருந்தொற்று நேற்று(மார்ச் 7) 158 என மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது. அண்டை நாடுகளில் தொற்று பாதிப்புகள் அதிகம் உள்ளதால், பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். 1.30 கோடி பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர்.

கடந்த மெகா தடுப்பூசி முகாமில் 6 லட்சம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக்கொண்டது வருத்தமளிக்கிறது. பல்வேறு ஏற்பாடுகள், அறிவிப்புகள் ஏற்படுத்தப்பட்ட நிலையில் தடுப்பூசி செலுத்துவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. தொற்று முடிவுக்கு வந்துவிட்டது என மக்கள் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். வரும் சனிக்கிழமை நடைபெறும் 24ஆவது மெகா தடுப்பூசி முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் தற்பொழுது 495 பேர் மட்டுமே சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். மற்ற மருத்துவமனைகளில் இடங்கள் காலியாக உள்ளன.

உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு கிடைக்குமா..?

உக்ரைனில் இருந்து நாடுதிரும்பிய மாணவர்களுக்கு மருத்துவக்கல்வி கிடைக்குமா? : அமைச்சர் மா.சு விளக்கம்

மேலும், உக்ரைனிலுள்ள மாணவர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுத்ததுடன், அவர்களை முதலமைச்சர் நேரிலும் சந்தித்து ஆறுதலும் தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவ மாணவர்கள் தங்களின் படிப்பைத் தொடர வழி செய்ய வேண்டும் என பிரதமருக்கும் முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். உக்ரைன் நாட்டிலிருந்து வந்துள்ள தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பு குறித்து ஒன்றிய அரசு வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளை அரசு செயல்படுத்தும்.

வெளிநாட்டில் மருத்துவம் படிக்கும் மாணவர்களின் விவரங்களை சேகரிக்கத் தமிழ்நாடு சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் பல்வேறு சிக்கல் காரணமாக தாமதமாகியுள்ளது. விரைவில் விவரங்கள் சேகரிக்கப்படும். அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதற்காகத்தான் சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது' என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜூக்கு 3 ஆயுள் தண்டனை


ABOUT THE AUTHOR

...view details