சென்னை:இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், 'முதலமைச்சர் 75ஆவது சுதந்திர தின உரையில், ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிடும் கோரிக்கையை ஏற்று, கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும் மாநில அரசு ஊழியர்கள்/ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை 01ஆம் தேதி முதல் அகவிலைப்படியை 31 விழுக்காட்டிலிருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பின்படி தலைமைச்செயலளாளர் முதல் கடைநிலை ஊழியர் வரை அனைத்து தமிழ்நாடு அரசின் ஊழியர்களுக்கும் இந்த அகவிலைப்படி ஜூலை 01ஆம் தேதி முதலே உயர்த்தி வழங்கப்படும் என அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆணையில் அனுமதிக்கப்பட்ட கூடுதல் அகவிலைப்படி ஜூலை 01ஆம் தேதி முதல் ரொக்கமாக வழங்கப்படும். ஜன.01 முதல் ஜூலை 30ஆம் தேதி வரை அகவிலைப்படியானது தொடர்ந்து 31 விழுக்காடாகவே இருக்கும்.