தமிழ்நாடு

tamil nadu

தொழிலதிபர் என்று கூறி நட்சத்திர விடுதியில் தங்கி மோசடி - ஒருவர் கைது

By

Published : Jun 1, 2019, 8:06 AM IST

சென்னை : தொழிலதிபர் என்று கூறி நட்சத்திர விடுதியில் தங்கிவிட்டு 26 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீஸார் கைது செய்தனர்.

தொழிலதிபர் என்று கூறி நட்சத்திர விடுதியில் தங்கி மோசடி

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி சின்னதாய் இரண்டு பெண்களோடு கிரேட் லேக்ஸ் சொசைட்டி என்ற அமைப்பை நடத்தி வருகிறார். சென்னை எழும்பூரில் உள்ள போர்டல் என்ற நட்சத்திர ஓட்டலில் குடும்பத்தோடு மாதக்கணக்கில் தங்கி விட்டு முதலில் ஒழுங்காக பணம் கொடுத்து நல்லவர் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி கொண்டுள்ளார். ஆனால், சக்திவேல் ஓட்டலில் தங்கியவர்களிடம் தனியாக பணம் பெற்றுள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து, ஹோட்டல் நிர்வாகத்தின் மேலாளர் முத்துக்குமார் என்பவர் எழும்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் பேரில் உதவி ஆணையர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு சக்திவேலை கைது செய்தனர்.மேலும், அவருடன் இருந்த அவரது மனைவி மற்றும் இரண்டு பெண்களையும் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

தொழிலதிபர் என்று கூறி நட்சத்திர விடுதியில் தங்கி விட்டு 26 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீஸார் கைது செய்தனர்...

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் மனைவி சின்னதாய் இரண்டு பெண்களோடு கிரேட் லேக்ஸ் சொசைட்டி என்ற அமைப்பை நடத்தி வருகிறார். அதன் இயக்குனராக இவர் இருப்பதாக கூறப்படுகிறது...

சென்னை எழும்பூரில் உள்ள போர்டல் என்ற நட்சத்திர ஓட்டலில் குடும்பத்தோடு மாதக்கணக்கில் தங்கி விட்டு முதலில் ஒழுங்காக பணம் கொடுத்து நல்லவர் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி கொண்டுள்ளார். பிறகு ஊரிலிருந்து வரக்கூடிய நபர்களுக்கு அந்த ஓட்டலில் தங்க வைத்திருக்கிறார். ஓட்டல் நிர்வாகம் இவர் பணத்தை தந்து விடுவார் என்று அவர் கூறுபவர்களுக்கு அறை ஒதுக்கி இருக்கிறார்கள். இதில் 26 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படுகிறது...

சத்திவேல் போர்டல் ஓட்டலில் தங்க வைக்கப்பட்ட நபர்களிடம் தனியாக பணத்தையும் பெற்றுக் கொள்வார். இதன் மூலமாக ஹோட்டல் நிர்வாகத்தின் மேலாளர் முத்துக்குமார் என்பவர் எழும்பூர் காவல்நிலையத்தில் கொடுத்த

புகாரின் பேரில் உதவி ஆணையர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு சக்திவேலை கைது செய்தனர். சக்திவேல் உடனிருந்த அவரது மனைவி சின்னத்தாய் மற்றும் இரண்டு பெண்களையும் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details