தமிழ்நாடு

tamil nadu

சென்னையில் 51வது வார்டு திமுக கவுன்சிலர் சஸ்பெண்ட்.. துரைமுருகன் அதிரடி அறிவிப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 10, 2024, 8:53 PM IST

DMK Councilor suspended: சென்னை மாநகராட்சி கவுன்சிலர் நிரஞ்சனா ஜெகதீசன் திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

Councilor Niranjana Jagatheesan
கவுன்சிலர் நிரஞ்சனா ஜெகதீசன்

சென்னை:திமுக கவுன்சிலர் நிரஞ்சனா ஜெகதீசன் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது. ”சென்னை மாநகராட்சியின் 51வது வார்டு திமுக கவுன்சிலர் நிரஞ்சனா ஜெகதீசன், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, தி.மு.க.விற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில், செயல்பட்டு வந்ததால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இவருடைய கணவன் ஜெகதீசன் என்பவர் ஏற்கனவே திமுக உறுப்பினராகவும், உதயநிதி ஸ்டாலினின் ரசிகர் மன்ற சென்னை வடக்கு மாவட்டச் செயலாளராகவும் இருந்து வந்துள்ளார். இவர் காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவர்களைத் தாக்க முயன்ற வீடியோ வெளியாகி, இணையம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது.

இவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டது. இதனையடுத்து கழகக் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதாக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து அவர் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுகிறார் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்தார். மேலும் ஜெகதீசன் திமுகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார், அவருடன் திமுகவினர் தொடர்பு வைக்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ராமர் கோயில் பிரதிர்ஷ்டை - காங்கிரஸ் புறக்கணிப்பு! சொன்ன காரணம் என்ன தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details