தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாட்டில் புதியதாக 36 பேருக்கு கரோனா பாதிப்பு!

By

Published : May 18, 2022, 10:19 PM IST

தமிழ்நாட்டில் மேலும் 36 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிபட்சமாக சென்னையில் புதிதாக 21 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் புதியதாக 36 பேருக்கு கரோனா பாதிப்பு!
தமிழகத்தில் மேலும் புதியதாக 36 பேருக்கு கரோனா பாதிப்பு!

சென்னை: புதிதாக ஆப்பிரிக்காவிலிருந்து வந்த ஒருவர் உட்பட 36 பேருக்கு கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் மே 18ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், 'கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 14 ஆயிரத்து 610 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த ஒருவர் உட்பட மேலும் 36 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 52 லட்சத்து 67 ஆயிரத்து 733 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறிவதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் 34 லட்சத்து 54 ஆயிரத்து 722 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது தெரியவந்தது.

தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 321 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 39 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 16 ஆயிரத்து 376 என உயர்ந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 38ஆயிரத்து 25 என தொடர்ந்து நீடித்து வருகிறது.

மேலும் சென்னையில் புதிதாக 21 நபர்களுக்கும், செங்கல்பட்டில் மூன்று நபர்களுக்கும், கடலூர், காஞ்சிபுரம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா இரண்டு நபர்களுக்கும், மதுரை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு நபர் எனவும்,விமானத்தின் மூலம் வந்த ஒருவர் உட்பட 36 நபர்களுக்குப் புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது’ என்றார்.

இதையும் படிங்க:நாமக்கல்லில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி

ABOUT THE AUTHOR

...view details