தமிழ்நாடு

tamil nadu

காதலித்து ஏமாற்றியதாக விக்ரமன் மீது புகார் - கமிஷனர் அலுவலகம் வரை சென்ற விவகாரம்!

By

Published : Jul 20, 2023, 6:51 PM IST

Updated : Jul 20, 2023, 7:56 PM IST

பிக் பாஸ் புகழ் விக்ரமன், காதலிப்பதாகக் கூறி பெண்ணிடம் பணம், கார் உள்ளிட்டவற்றை வாங்கி ஏமாற்றியதாகப் புகார் எழுந்த நிலையில், இளம்பெண் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

காதலித்து ஏமாற்றியதாக விக்ரமன் மீது புகார்
காதலித்து ஏமாற்றியதாக விக்ரமன் மீது புகார்

சென்னை:பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த விசிக நிர்வாகி, விக்ரமண். இவர் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றிவிட்டதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான இளம்பெண் கிருபா முனுசாமி என்பவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்தப் புகாரில், ''லண்டனில் ஆராய்ச்சி படிப்பை படித்துக் கொண்டிருக்கும் நான் ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்தவர். உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற வழக்கறிஞராக இருந்தேன். லண்டன் செல்லும்போது விமான நிலையத்தில் நண்பர்களுடன் கூட வழியனுப்ப வந்தபோது தான் விக்ரமன் பழக்கமானார்.

கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் என்னை காதலிப்பதாகக் கூறி நெருக்கமாக பழகிவந்தார். அதன்பின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கட்சியில் இணைந்து கொள்ளுமாறு அழைத்ததாக தன்னிடம் பொய் கூறினார். காதலிக்கும்போது சாதி ரீதியாக என்னை திட்டியுள்ளார். இருப்பினும் காதல் பிரிந்துவிடக்கூடாது என்பதற்காக அவ்வப்போது மன்னிப்புக் கேட்டு வந்தேன்.

நான் லண்டனில் இருக்கும்போது மூன்று முறை அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு உடல் நிலையில் பாதிக்கப்பட்டேன். இடையில் திடீரென தங்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது. பின்னர், கடந்த ஆண்டு தொடர்ந்து பொருளாதார ரீதியாக அவருக்கு உதவி செய்து வந்தேன். மீண்டும் பண நெருக்கடி காரணமாக விக்ரமனிடம் பணத்தை திருப்பிக்கேட்டபோது சண்டையிட்டுப் பிரிந்து சென்றார்.

பலமுறை அவருடன் பேச நினைத்தும் என்னை தவிர்த்து வந்தார். இதனால் மனரீதியாக பாதிக்கப்பட்டு சிகிச்சையும் பெற்றேன். பின்னர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் விக்ரமன் நுழைந்ததை அறிந்தேன். அதன்பின் பிக் பாஸில் இருந்து வெளிவந்த பிறகு கடந்த ஜனவரி மாதம் சந்திக்கும் பொழுது மிகவும் நெருக்கமாகப் பழகினார். ''அறம் வெல்லும்'' என்ற அமைப்பை தொடங்கியதற்கு நான் உதவினேன். மீண்டும் விக்ரமனோடு கடந்த மார்ச் மாதம் சண்டை ஏற்பட்டது. இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் கூட விக்ரமனுக்கு தேவைப்படும் பொழுது உதவி செய்து வந்தேன்.

என்னுடைய கார் ஆவணங்களை வைத்து விலை உயர்ந்த காரை விக்ரமன் வாங்கினார். இவ்வாறாக மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், உடல் ரீதியாகவும் எனக்கு பாதிப்பு ஏற்படுத்திய விக்ரமனின் மீது திருக்கோவிலூர் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாக அவரிடம் தெரிவித்தபோது மீண்டும் என்னை வந்து சமாதானப்படுத்தினார்.

எங்களது உறவை வெளிப்படையாக பொது வெளியில் தெரிவிக்கும்படி கூறும்போது, தொடர்ந்து தவிர்த்து வந்தார். தொடர்ந்து உதவுவதற்காக கொடுத்த பணத்தை திருப்பி கேட்கும் பொழுது மிரட்டினார். மேலும், தான் பிரபலமான அரசியல் கட்சியில் இருப்பதைக் காட்டி மிரட்டல் விடுத்தார்.

இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் கட்சியில் ஏப்ரல் மாதம் புகார் அளித்தேன். இந்தப் புகார் அளித்ததன் விளைவாக என்னிடம் வாங்கிய பணத்தில் 12 லட்சம் ரூபாய் பணத்தைத் திருப்பிக் கொடுத்த விக்ரமன், மீதமுள்ள 1.7 லட்சம் ரூபாய் பணத்தையும் திரும்பிக் கொடுக்குமாறு கேட்டேன்.

தொடர்ந்து, விக்ரமன் தான் இருக்கும் அரசியல் கட்சியை வைத்து மிரட்டி வந்தார். பின்னர், அவர் மீது புகார் அளித்ததன் அடிப்படையில் கடந்த மே மாதம் கட்சியில் விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி தலைவர் திருமாவளவனிடம் அறிக்கை சமர்ப்பித்தது. இருப்பினும் கட்சி விசாரணை கமிட்டியின் அறிக்கை என்னிடம் கொடுக்கப்படவில்லை. மூன்று மாதங்களாகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் அதிருப்தியில் தான் இந்தப் புகாரை அளித்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:மணிப்பூர் பழங்குடியின பெண்கள் விவகாரம்... முக்கிய குற்றவாளி கைது - போலீசார் தகவல்!

Last Updated :Jul 20, 2023, 7:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details