தமிழ்நாடு

tamil nadu

சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 6, 2023, 2:06 PM IST

Chennai Rain update: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

chennai-meteorological-department-about-rain-chances-in-tamil-nadu
சென்னை வானிலை அறிக்கை

சென்னை:தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் (டிசம்பர் 7, 8 தேதிகளில்) தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நேற்று (டிச.5) மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளில் நிலவிய மிக்ஜாம்’ தீவிர புயல்’ தெற்கு ஆந்திரா கடற்கரையின் தெற்கு பாபட்லாவிற்கு அருகே நண்பகல் 12.30 - 14.30 மணி அளவில் கடந்தது. இந்நிலையில், தமிழகத்தில் 10-ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது .

மழைக்கு வாய்ப்புள்ள இடங்கள்:டிசம்பர் 9-ஆம் தேதி அன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் 10-ஆம் தேதி அன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. அதிகபட்சமாக, விருதுநகர் AWS (விருதுநகர்), பொன்னமராவதி (புதுக்கோட்டை), நத்தம் (திண்டுக்கல்), சிங்கம்புணரி (சிவகங்கை), சாத்தியார் (மதுரை), அரிமளம் ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

வட கிழக்கு பருவமழை:வடகிழக்கு பருவமழையைப் பொறுத்தவரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 6 வரை பெய்த மழையின் அளவு 371.4 மி.மீ ஆகும். இந்த காலகட்டத்தில் இயல்பான அளவு 380 மி.மீ ஆகும். இது இயல்பை விட 2 சதவீதம் குறைவு.

மேலும் இந்த வடகிழக்கு பருவமழையில் சென்னையில் மட்டும்தான் 1077 மி.மீ அளவு மழை பெய்து உள்ளது. இந்த காலகட்டத்தில் இயல்பான அளவு 707.5 மி.மீ ஆகும். மேலும், வட தமிழகத்தில் இயல்பான அளவு மற்றும் இயல்பை விட அதிகமாகவே மழை பெய்துள்ளது.

இதையும் படிங்க:சென்னையில் தேங்கியுள்ள மழை நீர் 7 மணி நேரத்திற்குள் வடிந்துவிடும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி!

ABOUT THE AUTHOR

...view details