சென்னை: திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சவேதா (20) என்பவர், சென்னை - பாடியில் உள்ள பிரபல துணிக்கடையில் தங்கி வேலை செய்து வருகிறார்.
இவரும் நவீன் குமார்(21) என்பவரும் கல்லூரியில் படித்தது முதல் நான்கு ஆண்டுகளாகக் காதலித்து வருகின்றனர். இதனிடையே நவீன் குமார், சவேதாவைப் பார்க்க பாடியில் உள்ள விடுதிக்குச் சென்றுள்ளார்.
அப்போது அவர் திடீரென சவேதா செல்போனை வாங்கி, குறுஞ்செய்தி ஒன்றைப் பார்த்தவுடன், இது யாருடையது எனக் கேட்டு தகராறு செய்துள்ளார்.