தமிழ்நாடு

tamil nadu

அருண் ஜேட்லி இந்திய மக்களின் சொத்து-பன்வாரிலால் புரோஹித்

By

Published : Aug 24, 2019, 8:01 PM IST

சென்னை : அருண் ஜேட்லியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Panwarilal Purohit

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”தொழில் ரீதியாக அவர் ஒர் வழக்கறிஞர். சட்டத்தில் அனுபவம்வாய்ந்த அரசியல் தலைவர். அவரின் அரசியல் ஆளுமை திறனை இந்த நாடு தற்போது இழந்துள்ளது.

அவர் இந்திய மக்களின் சொத்து, தேசத்துக்கும் மக்களுக்கும் அவர் அளித்த பங்களிப்பு எப்போதும் மக்கள் நினைவில் இருக்கும்.

அருண் ஜேட்லியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் தமிழ்நாடு ஆளுநர்

அருண் ஜேட்லியின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை அவரின் குடும்பத்திற்கும் உறவினர்களுக்கும் தெரிவித்துகொண்டு, அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

Intro:Body:Conclusion:

ABOUT THE AUTHOR

...view details