தமிழ்நாடு

tamil nadu

பொறியியல் மாணவர்களுக்கு அண்ணா பல்கலை.யின் முக்கிய அறிவிப்பு

By

Published : Nov 12, 2021, 5:18 PM IST

பொறியியல் படிப்புகளில் அக மதிப்பீட்டிற்கான மதிப்பெண் 20 விழுக்காட்டிலிருந்து 40 ஆக உயர்த்தி அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் படிப்புகள் 2021ஆம் ஆண்டிற்கான புதிய நடைமுறையினை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் மாணவர்களுக்கான பாடத்திட்டம், தேர்வு, மதிப்பெண்கள் வழங்கும் முறை உள்ளிட்டவற்றில் மாற்றம்செய்யப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் இருந்து வரக்கூடிய அக மதிப்பீட்டு மதிப்பெண் 20 விழுக்காட்டிலிருந்து 40 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வரையில் 20 விழுக்காடு மதிப்பெண் அக மதிப்பீட்டிற்கும், 80 விழுக்காடு மதிப்பெண் எழுத்துத் தேர்விற்கும் வழங்கப்பட்டுவந்தன.

புதிய நடைமுறையில் (40+60) 40 விழுக்காடு மதிப்பெண் அக மதிப்பீட்டிற்கும், 60 விழுக்காடு மதிப்பெண் எழுத்துத் தேர்விற்கும் வழங்கப்பட உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

மேலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த ஒட்டுமொத்த சராசரி மதிப்பெண் 7 விழுக்காட்டிலிருந்து 6.5 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு முதல் மாணவர்கள் தாங்கள் வைத்துள்ள அரியர்களை முடிக்க நான்கு வாய்ப்புகள் மட்டுமே வழங்கப்பட்டுவந்தன. புதிய நடைமுறையின்படி இந்த விதிமுறை ரத்துசெய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் படிப்பினைப் பாதியில் நிறுத்திவிட்டு இடைநின்றால், மீண்டும் சேர்ந்து தொடர்ந்து படிக்கவும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

நடப்பு கல்வியாண்டில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் அடுத்தடுத்து வரக்கூடிய பருவத் தேர்வுகளில் அரியர் தேர்வு எழுதி தேர்ச்சி பெறலாம் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: நீரில் மூழ்கிய 500 ஏக்கர் சம்பா பயிர்கள்: விவசாயிகள் வேதனை!

ABOUT THE AUTHOR

...view details