சென்னை: 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கும், 2026ஆம் ஆண்டு வரவிருக்கிற தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கும் சேர்த்து பாமக முழு வேகத்துடன் தயாராகி வருகிறது. அதற்கான பணிகளும் முழு மூச்சுடன் நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம், சென்னை திருவேற்காட்டில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று (மே 28) நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பாமக நிறுவனா் ராமதாஸ் தலைமை வகித்தார். மேலும், தலைவா் ஜி.கே.மணி கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினா்கள், சிறப்பு விருந்தினா்கள் என அனைவரும் பங்கேற்றனர்.
ஜி.கே.மணி தலைவராக இருந்து வரும் நிலையில், கட்சியின் புதிய தலைவராக தற்போது இளைஞரணி தலைவராக இருக்கும் அன்புமணி தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில்,அன்புமணி தற்போது பாமகவின் தலைவராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.