தமிழ்நாடு

tamil nadu

மீண்டும் அண்ணாநகரில் அதிகரிக்கும் கரோனா!

By

Published : Oct 21, 2020, 12:10 PM IST

சென்னை: அண்ணா நகரில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ளது என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

again corona toll increased in anna nagar
again corona toll increased in anna nagar

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும் கரோனாவின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. குறிப்பாக, சென்னையில் சில மண்டலங்களில் கரோனா தொற்று தீவிரமடைந்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

கரோனா பரவலைத் தடுக்க கிருமி நாசினி தெளிப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற செயல்களில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருவதால், ராயபுரம், தண்டையார்பேட்டையில் தற்போது அதன் பரவல் சற்று குறைந்துள்ளது.

இருப்பினும் அண்ணா நகர், கோடம்பாக்கம் போன்ற மண்டலங்களில் பரவல் அதிகமாக உள்ளது. தற்போது அண்ணா நகரில் பாதிக்கப்பட்ட எண்ணிக்கை 21ஆயிரத்தை கடந்துள்ளது. அதே போல் கோடம்பாக்கத்தில் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை நெருங்குகிறது.

இந்தப் பரவலை குறைப்பதற்கு அந்தப் பகுதி முழுவதும் அதிக மருத்துவ முகாம்கள் மூலம் மக்களுக்கு தொடர்ந்து மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதுவரையிலும் சென்னை மாநகராட்சியில் மொத்தம் ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 754 பேர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 363 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

எஞ்சியுள்ள 11 ஆயிரத்து 845 பேர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 3546 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் சென்னையில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டல வாரியான பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி,

அண்ணா நகர் - 21035 பேர்

கோடம்பாக்கம் - 20899 பேர்

ராயபுரம் - 17334 பேர்

தேனாம்பேட்டை - 18120 பேர்

தண்டையார்பேட்டை - 15109 பேர்

திரு.வி.க. நகர் - 14760 பேர்

அடையாறு - 14958 பேர்

வளசரவாக்கம் - 12286 பேர்

அம்பத்தூர் - 13447 பேர்

திருவொற்றியூர் - 5833 பேர்

மாதவரம் - 6890 பேர்

ஆலந்தூர் - 7756 பேர்.

சோழிங்கநல்லூர் - 5243 பேர்

பெருங்குடி - 6845 பேர்

மணலி - 3000 பேர்

ABOUT THE AUTHOR

...view details