சட்டபேரவையில் இருந்து வெளிநடப்புக்கு பின்னர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது , விக்னேஷின் உடற்கூறு ஆய்வு முடிவில் அவரது உடலில் 13 இடங்களில் காயம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் , இந்த வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டுமென்றால் , சிபிஐயிடம் வழக்கை ஒப்படைக்க வேண்டும் என்றார்.
இந்த வழக்கை தமிழக காவல்துறை விசாரித்தால் விசாரணை நேர்மையாக நடைபெறாது என குறிப்பிட்ட அவர் அரசியல் நோக்குடன் தருமபுரம் ஆதினம் பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளதாக குற்றஞ்சாட்டினார்.