தமிழ்நாடு

tamil nadu

அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பான வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றம்

By

Published : Aug 25, 2022, 4:35 PM IST

அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பாக பதிவான நான்கு வழக்குகளையும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக, தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டதுப் தொடர்பான வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றம்
அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டதுப் தொடர்பான வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றம்

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி. சண்முகம் தாக்கல் செய்திருந்த மனுவில், 'ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடந்தபோது, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்திற்குள் புகுந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கியதாக அளித்தப் புகாரில் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவும் செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பிற்கும் ஏற்பட்ட தகராறால், இரு தரப்பினருக்கும் சுவாதீன பிரச்னை இருந்ததாகவும், அதன்படி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதாகவும், ஆனால் அவ்வாறு எந்தப் பிரச்னையும் இல்லை’ என மனுவில் தெரிவித்துள்ளார். அந்தச் சீலை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு அதிமுக அலுவலகத்திற்குள் தாங்கள் சென்றபோது, அலுவலகத்தைத் திறந்து பார்த்தபோது சொத்து பத்திரங்கள், கம்ப்யூட்டர்கள், 37 வாகன ஆவணங்கள் உள்ளிட்டவற்றை காணவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஜூலை 11இல் புகுந்த ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் ஆவணங்களை எடுத்துச்சென்றது தெரியவந்தாகவும், இதுதொடர்பாக மாவட்டச்செயலாளர் ஆதிராஜாராஜம் அளித்த புகாரைப் பெற்றுக்கொண்ட ராயப்பேட்டை காவல் நிலையத்தினர், ஒப்புகைச்சீட்டு கூட வழங்கவில்லை எனவும், உயர் அலுவலர்களைத்தொடர்பு கொண்ட பிறகே புகாரைப் பெற்றதற்கான சான்று கிடைக்கப்பெற்றதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

ஜூலை 23ஆம் தேதி புகார் அளித்தும், புகாரை காவல் துறையினர் உரிய முறையில் விசாரிக்கவில்லை எனவும், ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக காவல்துறை செயல்பட்டு வருவதால், புகாரை சிபிஐ அல்லது பிற விசாரணை அமைப்பிற்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு இன்று(ஆக.25) விசாரணைக்கு வந்தபோது, அதிமுக அலுவலகத்தில் நடந்த கலவரம், ஆவணங்கள் சூறை தொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான 4 வழக்குகளையும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு டிஜிபி உத்தரவிட்டுள்ளதாகக் கூறி, அந்த உத்தரவு நகலை தாக்கல் செய்தார்.

இதைப் பதிவு செய்த நீதிபதி, வழக்குகள் தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தது குறித்து தெரிவிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

இதையும் படிங்க: ஒருமையில் அதட்டினாரா கே.என்.நேரு? - மேயர் பிரியா விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details