தமிழ்நாடு

tamil nadu

பி.இ, பி.டெக் படிப்பில் 438 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை

By

Published : Sep 10, 2021, 5:12 PM IST

தமிழ்நாட்டில் பி.இ, பி.டெக் படிப்பில் 438 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 45 பேருக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடுவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மாணவர்கள் சேர்க்கை
மாணவர்கள் சேர்க்கை

சென்னை: அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி நிறுவனத்தின் அனுமதியை பெற்ற பொறியியல் கல்லூரிகளில் 2021-22ஆம் கல்வியாண்டில் பி.இ, பி.டெக். படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு அண்ணா பல்கலை கழகத்தில் 438 கல்லூரிகள் அங்கீகாரம் பெற்றுள்ளன.

பொறியியல் படிப்பில் சேர ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை ஆன்லைனில் www.tneaonline.org, www.tndte.gov.in என்ற இணையதளங்களின் மூலம் தொழில் நுட்ப கல்வி இயக்ககம் விண்ணப்பங்களை பெற்றது. இதில், விளையாட்டு வீரர்கள் 2,547 பேரும் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 1,191 பேரும் மாற்றுத்திறனாளிகள் 237 பேரும் என ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 930 மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர்.

பொறியியல் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்திருந்த ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 930 மாணவர்களுக்கான ரேண்டம் எண்கள் 25ஆம் தேதி வெளியிடப்பட்டது. அவர்களில் ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 45 மாணவர்கள் விண்ணப்பிக்க கட்டணத்தை செலுத்தி உள்ளனர்.

இவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 957 மாணவர்களும் பிற மாநிலங்களை சேர்ந்த 1,088 பேரும் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாடு பாடத்திட்டத்தில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் 1,25,415 பேரும், சிபிஎஸ்இ மாணவர்கள் 18,208 பேரும், ஐசிஎஸ்இ மாணவர்கள் 688 பேரும் பிற வாரியங்களில் படித்தவர்கள் 734 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் 36,600 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் பள்ளிக்கல்வித்துறையின் கல்வித்தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தின் மூலம் நடைபெற்று வருகிறது. பொறியியல் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 14 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பொருநை - முதல் நாகரிகம் தமிழ் நாகரிகம் என்பதற்கான சாட்சி

ABOUT THE AUTHOR

...view details