தமிழ்நாடு

tamil nadu

சிறுமியை மிரட்டி பாலியல் வன்புணர்வு - பீகார் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

By

Published : Jan 30, 2023, 10:49 PM IST

10ஆம் வகுப்பு மாணவி குளிக்கும்போது புகைப்படம் எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த பீகார் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை:பீகாரில் இருந்து வேலை தேடி, பெண் ஒருவர் தனது மகளுடன் சென்னை மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்தார். துக்க நிகழ்வுக்காக பீஹார் செல்ல வேண்டியிருந்ததால், தனது 10ஆம் வகுப்பு பயிலும் மகளை தனக்குத் தெரிந்த, பீகாரைச் சேர்ந்தவர் வீட்டில் விட்டுச் சென்றார்.

அந்த வீட்டில் பாதுகாவலராக இருந்த பீகாரைச் சேர்ந்த ராகுல் குமார் என்பவர் மாணவி குளிக்கும்போது மறைந்திருந்து புகைப்படம் எடுத்து, அதைக்காட்டி பணம் நகைகளை பறித்துக் கொண்டதுடன், மாணவியை கிழக்கு கடற்கரைச் சாலைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

தனக்கு நேர்ந்த கொடுமையை தாயிடம் கூறியுள்ளார், மகள். கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக, தாய் அளித்த புகாரின் அடிப்படையில் ராகுல் குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராகுல் குமார் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் தமிழ்நாடு அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:பட்டியலின இளைஞரை தரக்குறைவாகப் பேசிய ஊராட்சி தலைவர் கைது - பொதுமக்கள் கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details