தமிழ்நாடு

tamil nadu

சென்னை கார் பந்தயத்தில் விபத்து; வீரர் பலி

By

Published : Jan 8, 2023, 11:06 PM IST

Updated : Jan 8, 2023, 11:33 PM IST

சென்னை இருங்காட்டுக்கோட்டை கார் பந்தய மைதானத்தில் நடந்த கார் விபத்தில் வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

சென்னை கார் பந்தயத்தில் விபத்து; கார் பந்த வீரர் பலி
சென்னை கார் பந்தயத்தில் விபத்து; கார் பந்த வீரர் பலி

சென்னை:இருங்காட்டுக்கோட்டையில் உள்ள கார் பந்தய மைதானத்தில் இன்று கார் பந்தய போட்டி நடந்தது. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கார்பந்தய வீரர் குமார் (59) என்பவர் கலந்து கொண்டார். போட்டியின் போது குமாரின் கார் விபத்துக்கு உள்ளனது. இதில் அவரின் கார் பலத்த சேதமடைந்தது.

உடனடியாக வீரர் குமார் காரில் இருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்த போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ‘தமிழர்களின் வரலாற்றில் மூக்கை நுழைக்கிறார் ஆளுநர்’ - எம்பி கனிமொழி

Last Updated : Jan 8, 2023, 11:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details