தமிழ்நாட்டில் வரும் டிசம்பர் 27 மற்றும் 30ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறும் என மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்க தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களின் விவரத்தை மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.