தமிழ்நாடு

tamil nadu

கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர 4 லட்சம் பேர் விண்ணப்பம்

By

Published : Jul 28, 2022, 8:05 AM IST

தமிழ்நாட்டில் இதுவரை 4 லட்சத்து 7 ஆயிரத்து 45 பேர் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்துள்ளனர்.

arts and science colleges  arts and science colleges admission  arts and science colleges application  கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பம்  கலை அறிவியல் கல்லூரி  மாணவர்கள் விண்ணப்பம்
மாணவர்கள் விண்ணப்பம்

இது குறித்து கல்லூரிக்கல்வி இயக்குனர் கூறும்போது, “தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான (2022-23) விண்ணப்பங்களை http://www.tngasa.in/ அல்லது http://www.tngasa.org/ என்ற இணையதள முகவரிகளில் ஜூன் 22ஆம் தேதி முதல் ஜூலை 27ஆம் தேதி வரையில் பதிவு வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டது.

இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள் கல்லூரி உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டிருந்தது. அனைத்து மையங்களிலும் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் ஜூலை 27ஆம் தேதி இரவு 12 மணி வரையிலும், 4லட்சத்து 7 ஆயிரத்து 45 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். அவர்களில் 3 லட்சத்து 34 ஆயிரத்து 765 மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்துள்ளனர். 2 லட்சத்து 98 ஆயிரத்து 56 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணங்களை செலுத்தியுள்ளனர். மாணவர் சேர்க்கை குறித்த வழிகாட்டுதல் மற்றும் விவரங்கள் அனைத்தும் இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் 044 28260098, 28271911 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்” என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: நிலுவையில் இருந்த 21 மசோதாக்களில் 6-க்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

ABOUT THE AUTHOR

...view details