சென்னை: சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்குப்பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசியத்தகவல் கிடைத்தது.
இதையடுத்து சுங்கத்துறை அலுவலர்கள் விமானப்பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் சென்றனர். பின்னர் சுங்கத்துறை அலுவலர்கள் சந்தேகத்தின் பேரில் விமானத்திற்குள் சென்று ஒவ்வொரு இருக்கையாக சோதனை செய்தனர். பின்னர் விமான கழிவறைக்குச்சென்று பார்த்தபோது அங்கு கறுப்பு நிற டேப் சுற்றப்பட்ட நிலையில் ஒரு பார்சல் இருந்தது.