தமிழ்நாடு

tamil nadu

ரவுடிகளை ஒழிக்கும் நடவடிக்கை தொடரும் - தமிழக காவல்துறை டிஜிபி சபதம்; என்கவுன்ட்டருக்குப்பின் பேட்டி!

By

Published : Aug 1, 2023, 6:57 PM IST

Updated : Aug 1, 2023, 7:46 PM IST

ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரவுடிகளை ஒழிக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என்று தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் பேட்டி

செங்கல்பட்டு: கூடுவாஞ்சேரி அடுத்த அருங்கல் பகுதியில் இன்று அதிகாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த கார் ஒன்று போலீஸ் வாகனம் மீது மோதி நின்றது. இதனை அடுத்து, காரை சுற்றி வளைத்த போலீசார் உள்ளிருந்த மர்மநபர்களைப் பிடிக்க முயற்சி செய்தனர்.

அப்போது காரில் இருந்த நான்கு மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் காரில் இருந்து இறங்கி போலீசாரை வெட்ட முயற்சித்துள்ளனர். அச்சமயத்தில், உதவி ஆய்வாளர் சிவகுருநாதனை இடது கையில் ரவுடிகள் வெட்டிவிட்டு மீண்டும் தலையில் வெட்ட முயற்சித்துள்ளனர். இதனை சுதரித்த அவர், உடனடியாக குனிந்ததால் தொப்பியில் வெட்டு விழுந்து உள்ளது. இதில் நூலிழையில் அவர் உயிர் தப்பி உள்ளார்.

பின்னர் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டதில் இரண்டு ரவுடிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மற்ற இரண்டு ரவுடிகள் அங்கிருந்து தப்பி ஓடிள்ளனர். அவர்களைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ரவுடிகள் வெட்டியதில் படுகாயம் அடைந்த உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். மேலும், அவரை தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று, வெட்டு காயம் அடைந்த காவல் உதவி ஆய்வாளர் சிவகுருநாதனை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் மருத்துவரிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

அதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி சங்கர் ஜிவால் கூறியதாவது, "கூடுவாஞ்சேரி காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் வாகனத்தணிக்கையின்போது கார் ஒன்றை நிறுத்த முயற்சித்துள்ளனர். அப்போது வேகமாக சென்று காவல் வாகனம் மீது மோதியதுமட்டும் இல்லாமல், காரில் இருந்து இறங்கி கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் காவலர்களைத் தாக்க முயற்சித்துள்ளனர்.

இதில் உதவி ஆய்வாளர் சிவகுருநாதனுக்கு கையில் வெட்டுக்காயம் பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் சாதுரியமாக செயல்பட்டு ஏ ப்ளஸ் கேட்டகிரியில் உள்ள இரண்டு குற்றவாளிகளை சம்பவ இடத்திலேயே சுட்டு உள்ளனர்.

தற்போது காயமடைந்த உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் நலமுடன் சிகிச்சைப் பெற்று வருகிறார். தப்பிச்சென்ற மற்ற இருவரை தனிப்படைகள் அமைத்து தேடும் பணி நடைபெற்று வருகிறது. பொதுவாக தொடர்ந்து ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரவுடிகளை ஒழிக்கும் பணி தொடர்ந்து நடைபெறும்" எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்ற தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் ஆய்வு மேற்கொண்ட பின் மற்ற இரண்டு நபர்களையும் பிடிப்பதற்குத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும்; காயம் அடைந்த உதவியாளர் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:அவசரத்திற்கு உதவிய நண்பனை கொள்ளை வழக்கில் கோர்த்து விட்ட திருடன்… சென்னையில் சுவாரஸ்ய சம்பவம்!!

Last Updated :Aug 1, 2023, 7:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details