தமிழ்நாடு

tamil nadu

அரியலூரில் கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இருவர் உயிரிழப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 24, 2023, 8:47 AM IST

Kollidam river death: கொள்ளிடம் ஆற்றில் கடந்து செல்லும் பொழுது நீரில் அடித்துச் செல்லப்பட்டு இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இருவர் உயிரிழப்பு.
கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இருவர் உயிரிழப்பு.

அரியலூர்:ஜெயங்கொண்டம் அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு ஊருக்குச் செல்ல கொள்ளிடம் ஆற்றங்கரையில் இறங்கி குறுக்கே நடந்து சென்றபோது நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த தா.பழூர், அண்ணங்காரன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் குலோத்துங்கன் மற்றும் இளஞ்சேரன். இவர்கள் இருவரும் உறவினர்கள் ஆவர். இவர்கள் மற்றும் இவரது உறவினர்கள் சிலர் நேற்று முன்தினம் தஞ்சாவூர் மாவட்டம், வாண்டாயிருப்பு பகுதியில் உறவினர் தியாகராஜன் என்பவர் இறந்த துக்க நிகழ்ச்சிக்குச் சென்றுள்ளனர்.

பின்னர், துக்க நிகழ்ச்சி முடிந்து அண்ணங்காரன்பேட்டைக்குச் செல்வதற்காக குலோத்துங்கன், இளஞ்சேரன் மற்றும் அவர்களுடன் சிலர் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி, குறுக்கே நடந்து சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக குலோத்துங்கன் மற்றும் இளஞ்சேரன் ஆகியோரை ஆற்றுத் தண்ணீர் இழுத்துச் சென்றுள்ளது. இதனையடுத்து, அவர்களுடன் வந்தவர்கள் அவர்கள் இருவரையும் தேடியுள்ளனர்.

தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட இருவரும் கிடைக்காத நிலையில், இது குறித்த தகவலை த.பழூர் காவல் நிலையத்திற்கு தெரிவித்துள்ளனர். பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த த.பழூர் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட இருவரையும் தேடி உள்ளனர்.

நீண்ட நேரம் தேடியும் இருவரும் கிடைக்காத நிலையில், நேற்று (டிச.23) கொள்ளிடம் ஆற்றங்கரையில் இறந்து மிதந்த நிலையில் இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இவ்வாறு ஆற்றுநீரில் அடித்துச் செல்லப்பட்டு இருவரும் சடலமாக மீட்கப்பட்டது குறித்து, தா.பழூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:நாகூர் தர்காவின் 467ஆம் ஆண்டு கந்தூரி விழா; கோலாகமலாக நடைபெற்ற சந்தனக்கூடு ஊர்வலம்!

ABOUT THE AUTHOR

...view details