தமிழ்நாட்டில் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் தேர்தல் நடத்தப்படவில்லை. இப்பகுதிகளுக்கு தேர்தலை நடத்த வரைவு வாக்காளர் பட்டியல், வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை இறுதி செய்வதற்காக அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் ரத்னா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர்களும், உடையார்பாளையம், வரதராஜன்பேட்டை பேரூராட்சி ஆணையர்களும் கலந்துகொண்டனர். அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.