தமிழ்நாடு

tamil nadu

நூலிழையில் உயிர் தப்பிய சிறுமி! நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி

By

Published : Jun 20, 2019, 7:36 AM IST

அரியலூர்: சின்னக் கடைத்தெருவில் மருந்துக்கடை ஒன்றின் முன்பாக ஏற்பட்ட விபத்தில் நூலிழையில் சிறுமி உயிர் தப்பிய நிகழ்வின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

cctv

அரியலூர், பெரியார் நகரைச் சேர்ந்தவர் முருகேசன். இவர், உடையார் பாளையத்தில் உள்ள இந்தியன் வங்கி நகை மதிப்பீட்டாளராக பணியாற்றிவந்தார்.

இந்நிலையில், இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, மருந்து வாங்கத் தனது பேத்தியுடன் அரியலூர் சின்ன கடைத்தெருவில் உள்ள முருகன் மருந்தகத்துக்கு சென்றுள்ளார்.

அப்போது, மருந்து வாங்கிவிட்டு இருசக்கர வாகனத்தில் நின்றுகொண்டு பேத்தியை ஏற்ற முயன்றார். அந்த நேரத்தில், பின்னால் வேகமாக வந்த மினி லாரி ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், அந்த முதியவர் படுகாயமடைந்தார். அதிர்ஷ்டவசமாக, அவரின் பேத்தி நூலிழையில் உயிர் தப்பினார்.

இதையடுத்து, விபத்துக்குள்ளான முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சுய நினைவை இழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

இந்நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில், சிறுமி நூலிழையில் தப்பிய காட்சி நெஞ்சைப் பதற வைப்பதாக இருக்கிறது. மேலும், தன் கண்முன்னே தாத்தா விபத்துக்குள்ளான சம்பவத்தை பார்த்த அந்தச் சிறுமி கதறி அழும் காட்சி காண்போரைக் கண்கலங்கவைக்கிறது.

அரியலூர் - பேத்தி கண்முன்னே தாத்தா மீது மோதிய மினி லாரி


நூல் இலையில் உயிர் தப்பிய பேத்தி

நெஞ்சை பதற வைக்கும் CCTV காட்சி


அரியலூர் பெரியார் நகரில் வசிக்கும் முருகேசன் இவர் உடையார்பாளையத்தில் உள்ள இந்தியன் வங்கி நகை மதிப்பிட்டாளர் ஆவார்.


ஞாயிற்றுக்கிழமை இரவு மருத்துவாங்க தனது பேத்தியுடன்

அரியலூர் சின்ன கடைத்தெருவில் உள்ள முருகன் மெடிக்கலுக்கு சென்றுள்ளார்.

அப்போது மருந்து வாங்கிவிட்டு இருசக்கர வாகத்தை ஸ்டார்ட் செய்து பேத்தியை ஏற்ற முயன்றார்.

அப்போது பின்னால் வேகமாக வந்த மினி லாரி மோதியதில் அவர் படுகாயமடைந்தார்.
நூல் இலையில் பேத்தி உயிர் தப்பி காட்சி நெஞ்சை பதற வைக்கிறது.

மேலும் தாத்தா மீது மினி லாரி மோதிய சம்பவத்தை பார்த்த அந்த பேத்தி கதறி அழுவும் காட்சி காண்போரை கண்கலங்க வைக்கும்

ABOUT THE AUTHOR

...view details