தமிழ்நாடு

tamil nadu

அர்ஜென்டினா ஓபன்: அரையிறுதி வாய்ப்பை இழந்த சுமித் நகல்!

By

Published : Mar 6, 2021, 10:42 AM IST

அர்ஜென்டினா ஓபன் டென்னிஸ் தொடரில் இந்திய வீரர் சுமித் நகல் காலிறுதிப் போட்டியில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.

Watch | Argentina Open: Sumit Nagal crashes out in quarter-finals
Watch | Argentina Open: Sumit Nagal crashes out in quarter-finals

அர்ஜென்டினா ஓபன் டென்னிஸ் தொடர் அந்நாட்டின் தலைநகரான புவெனோய் அயர்ஸில் நடைபெற்றுவருகிறது. இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நகல் - ஸ்பெயினின் ஆல்பர்ட் ராமோஸ் வினோலாஸுடன் பலப்பரீட்சை நடத்தினார்.

இப்போட்டியில் தொடக்கத்திலேயே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சுமித் நகல் முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி ஆல்பர்ட் ராமோஸிற்கு அதிர்ச்சிகொடுத்தார்.

பின்னர் சுதாரித்துக்கொண்டு விளையாடிய ஆல்பர்ட் 6-2 என்ற கணக்கில் இரண்டாவது செட்டை தன்வசப்படுத்தினார். இதனால் இப்போட்டியில் யார் வெற்றிபெறுவார் என்ற விறுவிறுப்பில் மூன்றாம் செட்டிற்கான ஆட்டம் நடைபெற்றது.

இதில் இறுதிவரை போராடிய சுமித் நகல் 5-7 என்ற கணக்கில் மூன்றாவது செட்டை இழந்தார். இதன்மூலம் ஆல்பர்ட் ராமோஸ் 4-6, 6-2, 7-5 என்ற செட் கணக்கில் சுமித் நகலை வீழ்த்தி அர்ஜென்டினா ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இத்தோல்வியின் மூலம் இந்திய அணியின் சுமித் நகல், அர்ஜென்டினா ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிச் சுற்றோடு வெளியேறினார்.

இதையும் படிங்க: இபிஎல்: தோல்வியின்றி பயணிக்கும் செல்சி!

ABOUT THE AUTHOR

...view details