பிரிஸ்பேன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் வருகிற 17ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் அனைவரும் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று போட்டி அமைப்புக் குழுவினரும், ஆஸ்திரேலிய அரசும் உத்தரவிட்டிருந்தது.
ஆனால் ஜோகோவிச் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டது குறித்து எந்தவிதத் தகவலும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், போட்டி அமைப்புக் குழுவினரிடம் மருத்துவ விலக்கு கேட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் நேற்றிரவு (ஜனவரியில் 5) மெல்போர்ன் விமான நிலையம் வந்த நோவாக் ஜோகோவிச் விசா ரத்துசெய்யப்பட்டது. இதனால், அவர் விமான நிலையத்திலேயே காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து மீண்டும் செர்பியா திரும்பினார்.